வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. மே 19 மாலை வரை வெளியிடத் தடை

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. மே 19 மாலை வரை வெளியிடத் தடை
x
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதுகுறித்த அறிவுறுத்தலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்யபிரத சாகு வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை அச்சு ஊடகங்களிலோ, காட்சி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்