8 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு - பி.எட். தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8 ந் தேதி நடைபெறுவதால், அன்று நடைபெற இருந்த பி.எட்., தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
8 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு - பி.எட். தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடிவு
x
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. நடப்பாண்டில் பி.எட்., இரண்டாவது ஆண்டு பயிலும் மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, பி்எட்., மாணவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.  ஆனால் பி எட்.,  தேர்வு நடக்கும் நாளன்றே ஆசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து உயர்கல்வித்துறை செயலாளருடன் நடந்த  ஆலோசனைக்கு பின்னர், பி.எட்., தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மாவும் அதனை உறுதி செய்துள்ளார். அதனையடுத்து பி.எட்., மாணவர்களும் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்