திலகவதி கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது - திருமாவளவன்

விருத்தாச்சலம் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை, ஆணவப்படுகொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்காதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
விருத்தாச்சலம் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை, ஆணவப்படுகொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்காதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திலகவதி கொலை சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது வீண்பழி சுமத்தப்படுவதாக தெரிவித்தார். சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் திருமாவளவன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்