பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் மிரட்டல் - 4 இளைஞர்கள் கைது

பட்டப்பகலில் வீடு புகுந்து, கத்தி முனையில் செல்போன் திருடிய சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் மிரட்டல் - 4 இளைஞர்கள் கைது
x
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வடமாநிலத்தை சேர்ந்த 7 பேர் ஆவடியில் வசித்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி, வடமாநில தொழிலாளர்கள் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்த 5 பேர், செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன், ஜெய்சதீஷ், செந்தில்குமார், சஞ்சய் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அருண் என்பவரை மட்டும் தேடி வருகின்றனர். செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்