தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக புகார்

திருத்துறைப்பூண்டி அருகே, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் தெளித்து துன்புறுத்தியதாக புகார்
x
திருவண்டுதுறை கிராமத்தில், விளைநிலம் தொடர்பாக இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கொல்லிமலை உடலில், சிறுநீர் தெளித்து, அடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 2 பேரை கைது செய்தனர். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் குழு அமைத்து, தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைவது தொடர்பாக இந்த இரு சமூகத்தினரிடையே ஏற்கனவே முன்பகை இருந்தது, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்