அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 % முன்னுரிமை - வலியுறுத்தி ஸ்டாலின் அறிக்கை

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத முன்னுரிமை அளிப்பதே தி.மு.க.வின் நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 % முன்னுரிமை - வலியுறுத்தி ஸ்டாலின் அறிக்கை
x
மத்திய அரசு  அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத முன்னுரிமை அளிப்பதே தி.மு.க.வின் நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும்,  பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கிவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த 5 வருடத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் செயல் பல மடங்கு பெருகி விட்டதாகவும் அதில் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்