உலக அமைதி, மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலக அமைதி, நல்ல மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
உலக அமைதி, மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உலக அமைதி, நல்ல மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தும், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கமுதி அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சாலையின் வழியாக, சுவாமியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு சுவாமிக்கு 33 அபிஷேகங்கள், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்