பனைமரத்தால் உருவான பொருட்களின் கண்காட்சி...
3 நாட்களாக நடைபெற்று வந்த இரண்டாவது உலகப்பனை பொருளாதார மாநாடு நிறைவுபெற்றது.
கோவை பேரூரில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இரண்டாவது உலகப்பனை பொருளாதார மாநாடு நிறைவுபெற்றது. இதில் பனைமரம் குறித்த சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பனைமரத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள், அவற்றின் பயன்கள் குறித்து ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. பனை மர பொருட்களால் தயாரிக்கப்படும் பனைமர கல்யாணமாலை மற்றும் பரிசு பொருட்கள், பனங்கிழங்கின் மூலம் செய்யப்படும் பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்
Next Story