தம்பியை கொலை செய்த அக்கா : சொத்து தகராறில் அதிர்ச்சி சம்பவம்

குமாரபாளையம் அருகே சொத்துக்காக தம்பியை அவரின் சகோதரியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தம்பியை கொலை செய்த அக்கா : சொத்து தகராறில் அதிர்ச்சி சம்பவம்
x
வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிவேலுவிடம், அவரது சகோதரி கலா, சொத்து சம்பந்தமாக அடிக்கடி  தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை பழனிவேல் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உள்ளதாக கூறி, கலா மற்றும் அவரது குடும்பத்தார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தர, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் பழனிவேல் சேர்க்கப்பட்டபோது  சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் பழனிவேலை அவரின் சகோதரி கலா மற்றும் குடும்பத்தினர் , தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார்  கலா, அவரது கணவர், மகன் ஆகியோரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்