பெற்றோரால் அனாதையாக விடப்பட்ட ஒன்றரை வயது சிறுவன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அருகில் நேற்று அதிகாலை சாலையோரத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தனியாக நின்றுள்ளது.
பெற்றோரால் அனாதையாக விடப்பட்ட ஒன்றரை வயது சிறுவன்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அருகில் நேற்று அதிகாலை சாலையோரத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தனியாக நின்றுள்ளது. நீண்ட நேரமாகியும் குழந்தையை அழைத்து செல்ல யாரும் வராததை அடுத்து அப்பகுதி மக்கள் குழந்தையை,  மன்னார்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த குழந்தை பின்னர், குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.  இந்நிலையில் மன்னார்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ்குமார், தான் குழந்தையின் தாத்தா எனவும், குழந்தையின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்தார். இதனாலே பெற்றோர் குழந்தையை வீதியில் விட்டு சென்று உள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து உரிய விசாரணைக்கு பின்னர்  ஆட்சியர் முன்னிலையில் குழந்தை,  தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற பெற்றோர்கள் மீது  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்