முனீஸ்வரர் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
முனீஸ்வரர் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
x
அரியலூர் மீன்சுருட்டி அருகே  உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  400க்கும் மேற்பட்ட காளைகளுடன், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ ,தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்