சுங்கச்சாவடியை அடித்து உடைத்த பொதுமக்கள்...

சென்னை செங்குன்றம் அருகே, சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
x
கவரப்பேட்டை நோக்கி தனியார் கம்பெனி ஒன்றிற்கு, வேலை ஆட்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநருக்கும், பாடியநல்லூரில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், கட்டணம் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள்,  வேன் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, அனைத்து வாகன ஓட்டிகளும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, டோல்கேட் ஊழியர்களை கண்டித்து அங்கிருந்த பொதுமக்களும் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்