மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் : மாப்பிள்ளை அழைப்பு விருந்து உண்ட பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் : மாப்பிள்ளை அழைப்பு விருந்து உண்ட பக்தர்கள்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர்க்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மதுரை வடக்கு வெளி வீதியில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விருந்திற்கு தேவைப்பட்ட பொருட்களை வழங்கிய பொது மக்கள், சாப்பாடு தயாரித்தல், பரிமாறுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டனர். இதில் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து நண்பகலில் நடைபெறும் விருந்தில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக விழா குழவினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்