அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்

பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்வதாக புகார்
அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்
x
சேலம் பிள்ளையார் நகரில் அதிமுக பிரமுகர் முத்துசாமி என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.இது குறித்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு 2 தினங்களே உள்ள நிலையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்  - அமமுகவினர் இருவர் போ​லீசில் ஒப்படைப்பு​



தென் சென்னை தொகுதி சைதாப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமமுக கட்சியை சேர்ந்த இருவரை பிடித்து அதிமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர்.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்த அதிமுகவினர், இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்நது. இதனையடுத்து அவர்களை குமரன் நகர் காவல்நிலையத்தில் அதிமுகவினர் ஒப்படைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்