தாமிரபரணி ஆற்றில் அகழாய்வு : தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணி ஆற்று படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரிய வழக்கில், தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் அகழாய்வு : தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தாமிரபரணி ஆற்று படுகைகளில் அகழாய்வு  நடத்தக் கோரிய வழக்கில், தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  எழுத்தாளர்  முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,   தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் காணப்படும் தமிழர்களின் தொன்மையான அடையாளங்கள் அடிப்படையில், 37 இடங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிட  வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இது குறித்து மத்திய மாநில அரசின் தொல்லியல் அதிகாரிகள் பதில் அளிக்க  உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்