சிலை கடத்தல் தடுப்பு வழக்கு : சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்து

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து  யானை ராஜேந்திரன்  உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.   இந்த வழக்குடன் பொன். மாணிக்கவேல் நியமனம் தொடர்பான வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் ஒத்தி வைத்தது.  இந்த நிலையில் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே எம் ஜோசப் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும் என்றும், வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவில் சில மாற்றங்களை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கு - சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை ரத்து - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து                                                                                          

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்                                                                                 



Next Story

மேலும் செய்திகள்