"மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிக்கிறார்கள்" - சீமான்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கீழப்புதூர் பகுதியில் சீமான்பிரசாரம் மேற்கொண்டார்.
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கீழப்புதூர் பகுதியில் சீமான்
பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு
வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் 2 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அரசியல் கட்சியினர் மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிப்பதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.
Next Story