பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி கருத்தரங்கம்

ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ஆரோக்கியமற்ற வாழ்வுமுறை நோய்கள் குறித்து கருத்தரங்கம்
x
திருச்செந்தூர்  பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில், மனிதனின் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையால் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் கலை குருசெல்வி வரவேற்புரை ஆற்றினார். ஆரோக்கியமற்ற வாழ்வு முறையால் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பது குறித்து கல்லூரி செயலாளர்  சுப்பிரமணியம், இதயத்தின் ஆரோக்கியம் குறித்து டாக்டர் பாலமுருகன், உடல் பருமன் குறித்து டாக்டர் மதன் ஆகியோர் உரையாற்றினர். 

புற்று நோய் குறித்து டாக்டர் செல்வராஜ், ஆரோக்கியமான எண்ணம் மற்றும் வாழ்வு குறித்து ரஞ்சித் குமார் ஆகியோர் மாணவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். கல்லூரி இணை பேராசிரியர் பெண்ணரசி, நோய் தடுப்பு முறை குறித்து உரையாற்றினார். கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவிகளுக்கு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்