சொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டா கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
சொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
x
சேலம் மாவட்டம் மேட்டூரை அருகே கருமலை கூடல் காவல்துறை ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருள்செல்வன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களது காரை சோதனையிட்டதில் அதில், 12 நாட்டு வெடிகுண்டுகள், 7 பட்டாகத்திகள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் என 5 லட்சம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதிர்ச்சியடைந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில், அரவிந்த‌ன் என்பவர் சொத்துபிரச்சினை காரணமாக தன் தந்தையை கொல்வதற்காக தனது நண்பரான அருள் செல்வனிடம் உதவி கேட்டது தெரிய வந்த‌து. அவரை கொல்வதற்காகவே,இளம்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜை- அழைத்துகொண்டு சென்று கொண்டிருப்பதாக அருள் செல்வன் கூறியுள்ளார். இந்த தகவல்களை தொடர்ந்து வழக்கு பதிவுசெய்த போலீசார்,தந்தையை கொல்ல கூலிப்படையை ஏவிய அரவிந்தனை தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்