ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த  வீரமாகாளியம்மன்  கோயில்  கும்பாபிஷேகம்   விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூர்ணாகுதி, மஹா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனையடுத்து கருவறை கோபுரத்தில் உள்ள, கோபுரகலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்