விடுதி மாணவிகள் சாப்பிட்ட சட்னியில் இறந்து கிடந்த பல்லி - மாணவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதி மாணவிகள் சாப்பிட்ட சட்னியில் இறந்து கிடந்த பல்லி - மாணவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
x
நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் வகுப்புக்கு புறப்பட்ட அவர்கள் அருந்திய காலை உணவில் பல்லி இறந்து கிடந்ததை மாணவிகள் கண்டுபிடித்தனர்.  பாதிக்கப்பட்ட 15 மாணவிகளக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்