போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை - இளைஞர் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே போலீஸ் போல் நடித்து வாகன ஒட்டிகளிடம் வசூலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கொங்கணாபுரம் - சங்ககிரி சாலையில் மர்ம நபர் போலி காவல்துறை அடையாள அட்டை வைத்துக்கொண்டு வாகன ஓட்டிகளில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கொங்கணாபுரத்தில் சுற்றித் திரிந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வாகன ஓட்டிகளிடம் போலீஸ் என கூறி வசூல் வேட்டை நடத்தியதும், அவர் பெரியநாச்சியூரை சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்துத . இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story