தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
x
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரத்தில் உருத்திர வன்னிய மகாராஜா கோவில் விழாவை முன்னிட்டு புஷ்பவனம் குப்புசாமியின் நாட்டுப்புற கச்சேரி நடைபெற்றது. அங்கிருந்து காரில் சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் புஷ்பவனம் குப்புசாமி வைத்திருந்த 57 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பவனம் குப்புசாமி தம்பதி தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோவில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள் கச்சேரிக்கு பணம் கொடுத்ததாக பேப்பரில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் பணத்தை கொடுத்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்