உரிய ஆவணம் இல்லாததால் ரூ.50 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
உரிய ஆவணம் இல்லாததால் ரூ.50 லட்சம் பறிமுதல்
x
சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட  50 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் அதிகாரி ஞானவேல் தலைமையில் பறக்கும் படை குழுவினர் ராஜ அண்ணாமலைபுரம் அம்பேத்கார் மணிமண்டம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த ரேடியன் என்ற தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாமல் அதில் 50 லட்சம் ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது . இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணத்தை மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.  இதுதொடர்பாக தனியார் நிதிநிறுவனத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்