தேர்தல் களம் - விநோத வேட்பாளர்
பின்னோக்கி நடந்தவாறு வந்து வேட்பு மனுத்தாக்கல்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னோக்கி நடந்தவாறு வந்து மனு அளித்தார்.வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி தாலுக்கா அக்ரஹாம் பகுதியை சேர்ந்த மணி என்ற இவர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே முன்னோக்கி நடக்க உள்ளதாகவும், அது வரை பின்னோக்கி நடக்க சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story