பொள்ளாச்சியை போல நாகையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்...

பொள்ளாச்சி சம்பவத்தை போல நாகையிலும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
x
நாகை மாவட்டம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற இளைஞர், பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர். பெண்களை ஏமாற்றுதல், பாலியல் தொல்லை, கொலைமிரட்டல், மானப்பங்கபடுத்துதல் ஆகிய பிரிவுகளின் அந்த இளைஞரை கைது செய்தனர். அவன் செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப பெற்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பொள்ளாச்சி பயங்கரம், சென்னை பூந்தமல்லி விடுதி நிகழ்வு, தற்போது நாகை என நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாலியல் குற்றங்கள் தமிழகத்தை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்