முள்வேலியில் சிக்கிய புள்ளி மான் - மானை மீட்ட கிராம மக்கள்

பரமக்குடி அருகே முள்வேலியில் சிக்கிய புள்ளி மானை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
முள்வேலியில் சிக்கிய புள்ளி மான் - மானை மீட்ட கிராம மக்கள்
x
பரமக்குடி அருகே முள்வேலியில் சிக்கிய புள்ளி மானை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  குடி கிராமத்தில் உள்ள ஒரு அரவை மில் முள்வேலியில் புள்ளிமான் ஒன்று சிக்கியது. இதனை பார்த்த கிராம மக்கள் அந்த புள்ளி மானை மீட்டு அருகில் உள்ள ஒரு அறையில் வைத்து முதல் உதவி செய்தனர். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு கண்மாய் பகுதியில் விட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மானை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் வந்தவாசி அருகே, விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காவேரிப்பாக்கம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 30 அடி ஆழ   கிணற்றில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான்  ஒன்று விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், அந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்