மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தை

3 மாத குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் : செங்கல்பட்டு குழந்தைகள் இல்லத்தில் குழந்தை ஒப்படைப்பு
மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தை
x
சென்னையில் மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட 3 மாத ஆண் குழந்தையை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற மின்சார ரயிலில் பயணிகள் இறங்கிய பிறகு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், குழந்தையை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் கொடுத்தனர்.இதையடுத்து குழந்தையை செங்கல்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்த ரயில்வே போலீசார், குழந்தையை விட்டுச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்