சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

கைதிகளுக்கு பரோல் வழங்காததற்கு கண்டனம்
சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்
x
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகளுக்கு 6 மாதங்களாக பரோல் வழங்கபடவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைதி ஒருவரின் சகோதரர் இறந்ததால்,அந்த கைதிக்கு பரோல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாரேனும் இறந்தால்தான் பரோல் விடுமுறை கொடுப்பீர்களா என கேட்டு கைதிகள் மதிய உணவை சாப்பிடாமல் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை பரோல் வழங்க வேண்டும் என்றும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்