கருவுற்ற பெண்களுக்கு புதிய திட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை- தமிழகம் முதல் இடம்"
கருவுற்ற பெண்களுக்கான தாய் சேய் நல பெட்டகம் திட்டத்தை, சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். ஆயிரத்து 300 மருத்துவர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான பணி நியமன ஆணையையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இதுவரை 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story