பாஜகவினர் தீபமேற்றி வழிபாடு - மீண்டும் வேண்டும் மோடி என முழக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் மாவட்ட பா.ஜ.க.மகளிரணி சார்பில் "கமல் ஜோதி" நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்தில் மாவட்ட பா.ஜ.க.மகளிரணி சார்பில் "கமல் ஜோதி" நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி வழிபாடு செய்தனர். ஆலய வளாகத்தை சுற்றிலும் ஆயிரத்து எட்டு விளக்குகளில் தீபமேற்றிய பெண்கள் "மீண்டும் வேண்டும் மோடி எனவும் "மீண்டும் வேண்டும் பொன்னார்"என்று முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
Next Story