புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போலீசார்
புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
x
சென்னை மாதவரம் மஞ்சப்பாக்கம் சாலையில், புதிய சுங்கச்சாவடி  திறக்கப்பட்டதை கண்டித்து, லாரி உரிமையாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக சுங்க சாவடி அமைத்து வாகனங்களில் வரி வசூல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என, கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், வரி வசூல் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனர். சுங்கச்சாவடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை  போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்