டி.எஸ்.பி வீடு அலுவலகங்களில் திடீர் சோதனை : 4.35 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
கிருஷ்ணகிரியில் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில், கணக்கில் வராத 4 லட்சத்து, 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தொடர்பாக டி.எஸ்.பி. கண்ணனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டி.எஸ்.பி கண்ணன் கோவை மாநகர நில அபகரிப்பு பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story