சொத்துக்காக அண்ணன் கொலை : தம்பியை கைது செய்து விசாரணை
நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சொத்துக்காக அண்ணனை தம்பி கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயியை அவரது தம்பி விஜயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விஜயகுமார் உள்ளிட்ட 2 பேரை கைது செய்த போலீசார் வரதராஜ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story