ராகுல்காந்தியுடன் கனிமொழி சந்திப்பு

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.
x
திமுக -காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில்  திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.  அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர்  உடனிருந்தனர். தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.  15 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்