திருத்தணி முருகன் கோயிலுக்கு புதிய தேர் : இன்று மாலை வீதி உலா
திருத்தணி முருகன் கோயிலுக்கு திருத்தணி முருகன் திருவடி சபா சங்கம் சார்பில் ரூபாய் 50 லட்சம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு திருத்தணி முருகன் திருவடி சபா சங்கம் சார்பில் ரூபாய் 50 லட்சம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பர்மா தேக்கு மற்றும் வேங்கை மரங்களால் செய்யப்பட்ட இந்த தேரானது 28.5 அடி உயரம் கொண்டது. மாசி பெருவிழா மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவ காலங்களில் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக திருத்தேர் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மாலையில் தேர் வீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story