"தலைமை தேர்தல் ஆணையர், விரைவில் தமிழகம் வருகை"

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, விரைவில் தமிழகம் வருகிறார்.
தலைமை தேர்தல் ஆணையர், விரைவில் தமிழகம் வருகை
x
நாடாளுமன்ற  தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் தொடர்பாக, சென்னையில் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வருகிற 23 மற்றும் 24 தேதிகளில் தீவிர வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களை இட மாற்றம் செய்வது தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் பெற்று, தேர்தல் ஆணையத்துக்கு 22ம் தேதி அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். திருவாரூர் மற்றும் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட சத்யபிரதா சாகு, திருப்பரங்குன்றம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் ஒசூர் தொகுதி குறித்து சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் வரவில்லை எனவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்