சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து

சென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
x
சென்னை கோயம்பேட்டில் இருந்து கம்பத்திற்கு 36 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து,   தாம்பரம் மதுரவாயல் நெடுஞ்சாலை வழியாக இரும்புலியூர் மேம்பாலத்தில் வந்தபோது பேருந்தின் எஞ்சினில் இருந்து திடீரென புகை வந்தது. இதனையடுத்து சுத்தாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகளை உடனடியாக கீழே இறங்கும் படி கூறினர். பயணிகள் கீழே இறங்கிய சில விநாடிகளில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

Next Story

மேலும் செய்திகள்