ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் - ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் - ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
x
ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களில், ஆயிரத்து 186 பேரை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாறுதல் செய்தும் கல்வித் துறை உத்தரவிட்டது. மேலும், 17 -பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், செய்முறைத் தேர்வு மற்றும் பிரதான தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார். 
எனினும், பணியிட மாறுதல் மற்றும் 17-பி பிரிவின் கீழான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்