காரில் ஏசி போட்டு தூங்கிய டிரைவர் பலி..

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.
காரில் ஏசி போட்டு தூங்கிய டிரைவர் பலி..
x
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் குடிபோதையில் காரில் ஏசி போட்டு தூங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு என்ற அந்த ஓட்டுநர், மூச்சுத் திணறி உயிரிழந்தார். நீண்ட நேரமாக காரில் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவதை பார்த்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் விரைந்து காரின் கதவை திறந்து பார்த்தபோது பிரபு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்