ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை மீட்ட அமைச்சர்கள்...
விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்கள்.
விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர் .இதனைத் தொடர்ந்து, விராலிமலைக்கு சென்ற போது, சமத்துவபுரம் சத்திரம் சாலை ஓரத்தில், விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story