இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...

கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...
x
கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வழியாக பாலக்காடு வரும் ரயிலில்  ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்