சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடித்து காட்டினர்.  குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது , ஹெல்மெட் அணிவது கட்டாயம்,  செல்போன் பேசிக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி அவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதனை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்