சுதந்திர போராட்ட தியாகியின் வீடு இடிப்பு...

திருச்சி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, சுதந்திர போராட்ட தியாகி வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
சுதந்திர போராட்ட தியாகியின் வீடு இடிப்பு...
x
திருச்சி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, சுதந்திர போராட்ட தியாகி வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர். நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 97 வயதான சுதந்திர போராட்ட தியாகி வெள்ளைச்சாமி,  ஜே.சி.பி. எந்திரத்தின் முன் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேதாஜியின் ஐ.என்.ஏ. படையில் பணிபுரிந்ததற்காக தமிழக அரசு இந்த நிலத்தை வழங்கியதாக வெள்ளைச்சாமி கண்ணீருடன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்