சின்னத்தம்பிக்கு ஆதரவாக பேனர்கள், கட்அவுட்டுகள்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே தன்னார்வலர்கள் சிலர் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக சேவ் சின்னத்தம்பி என பேனர் வைத்துள்ளனர்.
x
திருப்பூர் ரயில் நிலையம் அருகே தன்னார்வலர்கள் சிலர் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக சேவ் சின்னத்தம்பி என பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் மனிதர்கள் செய்யும் குற்றத்திற்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா?, சின்னத்தம்பியை வாழ விடுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது... அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்களுக்கு பேனர் வைக்கப்பட்டு வதந்த நிலையில், முதன்முறையாக காட்டுயானை​க்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.. அந்த அளவிற்கு பொதுமக்களிடம் ஒரு ஹீரோ போல பார்க்கப்படுகிறது சின்னத்தம்பி யானை... ஊருக்குள் வலம் வந்தாலும், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் இருப்பதால், சின்னத்தம்பியை பெரும்பாலானவர்களுக்கு  பிடித்துவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்