எடப்பாடியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய போலீசார்...

எடப்பாடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தி வாகனஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி காவல்துறையினர் அசத்தி உள்ளனர்.
எடப்பாடியில் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய போலீசார்...
x
சேலம் மாவட்டம் எடப்பாடியில்  ஹெல்மெட் விழிப்புணர்வு  பேரணி நடத்தி 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி  காவல்துறையினர் அசத்தி உள்ளனர் ... ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை  நடத்திய சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபாகணிகர் இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கி உள்ளார் ..  இலவசமாக ஹெல்மெட் கொடுக்கப்படுகிறது என்ற தகவல் பரவியவுடன் எடப்பாடி பேருந்து நிலையத்தில் வாகனஓட்டிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்க முன்வந்த போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. 

"ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவருக்கு பரிசு"

ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிய   ஒருவருக்கு  200 ரூபாய்  ரொக்க பரிசு வழங்கி  தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பாராட்டி உள்ளார் .. சாலைபாதுகாப்பு வாரவிழாவைமுன்னிட்டு இருசக்கர விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர் , இவ்வாறு வாகன ஒட்டிய ஒருவரை பாராட்டினார் ..இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவரும்  பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி துண்டு பிரசுரங்களையும் மகேஷ்குமார் வழங்கினார்

Next Story

மேலும் செய்திகள்