வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு...

ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு...
x
திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் 51 திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதனிடையே ஜேஜே  நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 51 திருநங்கைகளுக்கும் ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

Next Story

மேலும் செய்திகள்