கும்கி யானையுடன் விளையாடும் சின்னதம்பி

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னத் தம்பி, 2 நாட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளது.
x
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னத் தம்பி, 2 நாட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளது. புதரில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி, தண்ணீர் குடித்துவிட்டு மாயமான நிலையில், கும்கி யானைகள் கட்டப்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்தது வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சின்னதம்பி, கலீம் கும்கி யானை உடன் விளையாடி வருவதாக தெரிவித்த வனத்துறையினர், வீடுகளை விட்டு, யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இதனிடையே, சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில், கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்