நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்

சென்னையில் பிரபல மருத்துவமனை மருத்துவர் என கூறி ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான சாக்​​லேட்டுகளை ஏமாற்றி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.
நூதன முறையில் சாக்லேட் திருட்டு : மர்ம நபர் மீது காவல் துறையில் புகார்
x
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மகேந்திரகுமார்,ஆயிரம் விளக்குப் பகுதியில் சாக்லேட் கடை நடத்தி வருகிறார். இவரை தொடர்புகொண்ட மர்மநபர் பிரபல மருத்துவமனை மருத்துவர் என கூறி சாக்லேட்  ஆர்டர் செய்துள்ளார். இதனை நம்பி சாக்​லேட்டுகளை பணியாளர் மூலம் மகேந்திர குமார் அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனை ஊழியர் என கூறி சாக்லேட்டுகளை வாங்கிக்கொண்ட ஒருவர்,  மருத்துவரிடம் காசோலை வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்