இன்று காந்தி நினைவு தினம் : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம், புதுக்கடையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை,மூட உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காந்தி நினைவு நாள் என்பதால் இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story